குளித்தலையில் பிளாஸ்டிக் கழிவுகளால் பொதுமக்கள் அவதி
குளித்தலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை;
கரூர் மாவட்டம் குளித்தலை நூலகம் பின்புறம் உள்ள ரயில்வே டிராக் ஒட்டியுள்ள சாக்கடையில் பல நாட்களாக குப்பைகள் தேங்கி துர் நாற்றம் வீசுகிறது. பல நாட்கள் பிளாஸ்டிக் பைகள், காலி பாட்டில்கள், குப்பைகள் தேங்கி நிற்பதால் புழுக்கள் உருவாகிவுள்ளது. செடி கொடிகள் வளர்ந்து கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்