பேச்சுவார்த்தை நடத்தி சிப்காட் அமையக்கூடாது என்பதனை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் சிப்காட் எதிர்ப்பு குழுவினர் கோரிக்கை மனு.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் சிப்காட் தொழில் பேட்டை அரசாணை பிறப்பித்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள சிப்காட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு மூலம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2026-02-09 13:45 GMT
இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் இதில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எங்கள் நிலங்களை அரசு எடுக்கக் கூடாது பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவசரகதியில் எங்களுடைய இடங்களை அபகரிக்க சிப்காட் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.எனவே சிப்காட் சம்பந்தமாக அனைத்து பணிகளும் உடனடியாக திறுத்தப்பட வேண்டும். உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். என கோரிக்கை மனு அளித்தனர்