மேட்ரிமோனியல் மூலம் அறிமுகமாகி கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்து, ரூ.10 லட்சம், 2.5 பவுன் நகையை பெற்று மோசடி செய்த சென்னை வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் புகார்

Dindigul;

Update: 2025-12-21 05:39 GMT
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சத்யா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவை ஒண்டிப்புதூரில் 2 மகன்களுடன் வசித்து துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். எனது கணவர் 2022ல் இறந்து விட்டார். எனது சகோதரி எனக்கு மேட்ரிமோனியல் மூலம் மணமகன் தேடினார். அதில் உள்ள செல்போன் எண் மூலம் கடந்த ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த 38 வயது வாலிபர் தொடர்பு கொண்டு தனக்கு திருமணமாகவில்லை என்றும், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன் பின்பு இருவரும் பழகி வந்தோம். அந்த சமயங்களில் அவர் தொழில் தேவைக்காக எனக் கூறி என்னிடம் ரூ. 10 லட்சம் மற்றும் 2.5 பவுன் நகை வாங்கினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் எனது வீட்டுக்கு வந்த அவர் கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. என்னுடன் பழகுவதை தவிர்த்து வந்தார். அவர் குறித்து விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், இதேபோல் வேறு ஒரு பெண்ணை ஏமாற்றியதாகவும் காவல் நிலையத்தில் புகார் உள்ளது நான் பணம், நகை குறித்து கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். என்னை போல் பலரும் பாதிக்கப்படாமல் இருக்க அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்யா கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Similar News