மறைந்த 121 கழக உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எம்.பி கே.ஆர். என் ராஜேஷ்குமார் பங்கேற்பு.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கலம் பேரூர் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பேரூரில்.;
கடந்த செப்டம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரை மறைந்த 121 கழக உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin மற்றும் துணை முதலமைச்சர் அண்ணன் இளம்தலைவர் Udhayanidhi Stalin ஆகியோரின் வழிகாட்டுதலுடன் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் குடும்ப நல நிதியை வழங்கினேன்.நிகழ்ச்சியானது சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி , ஒன்றிய கழக செயலாளர் அ.அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட துணை செயலாளர் ராணி, பேரூர் கழக செயலாளர்கள் தனபாலன், முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்த்பாபு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொன்.சித்தார்த், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கலைவாணன், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.