ஆவின் மாட்டுப் பொங்கல் திருவிழா” 2026ல் கலந்துகொண்டு, சிறப்பித்தா பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ்.
பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சி காட்டூர் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ப.மதிவானன் அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்ற ”ஆவின் மாட்டுப் பொங்கல் திருவிழா” 2026ல் கலந்துகொண்டு, சிறப்பித்தார்.;
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சி காட்டூர் கிராமத்தில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி பால்வளத்துறை இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் (ஆவின்) அ.ஜான்லூயிஸ், ஆகியோர் முன்னிலையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ப.மதிவானன் அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்ற ”ஆவின் மாட்டுப் பொங்கல் திருவிழா” 2026ல் கலந்துகொண்டார்.பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் , நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சி காட்டூர் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ப.மதிவானன் அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்ற ”ஆவின் மாட்டுப் பொங்கல் திருவிழா” 2026ல் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேற்படி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மாட்டுவட்டியினை தானே இயக்கி கிராமிய முறையில் பயணித்து, வந்தடைந்தார். தொடர்ந்து, பாரம்பரிய முறையில் நடைபெற்ற ”ஆவின் மாட்டுப் பொங்கல் திருவிழா” 2026ல் கலந்து கொண்டு, விவசாய சங்க உறுப்பினர்களுடன், புதுப்பானையில் பச்சிரிசி, வெல்லமிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும், அங்கிருந்த கால்நடைகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் ஆகியோருடன் கிராமிய முறையில் கயிற்று கட்டிலில் அமர்ந்து கலந்துரையாடி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், எலச்சிபாளையம் அட்மாகுழு தலைவர் மு.தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், பொது மேலாளர் (ஆவின்) மரு.ஆர்.சண்முகம், துணைப்பதிவாளர் (பால்வளம்) ஐ.சண்முகநதி உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.