பெண்ணிடம் நகை பறித்த நபர் கைது - துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர்..

ராசிபுரம் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்..

Update: 2024-07-23 11:40 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(48) மனைவி சுகுணா(43) நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கி உள்ளனர். அதிகாலை 5மணி அளவில் கணவர் நந்தகுமார் நடைப்பயிற்சி செல்வதற்காக வீட்டின் கதவை திறந்து வெளியே சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் வீட்டின் உள்ளே புகுந்து உறங்கிக் கொண்டிருந்த நந்தகுமார் மனைவி சுகுணா அணிந்திருந்த 8 பவுன் (தாலி)செயினை பறித்துச் சென்றதாகவும், தூக்கத்திலிருந்து விழித்த சுகுணா கூச்சிலிடுவதற்குள் மர்ம நபர் வீட்டில் இருந்து வெளியே ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சுகவனம் சம்பவம் தொடர்பாக பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (27) என்பவர் வீடு புகுந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர். 24 மணி நேரத்தில் வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் சுகவனம் மற்றும் காவலர்கள் திறமையாக செயல்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை அனைவரும் பாராட்டினர்.
Tags:    

Similar News