சிறுசேமிப்பு துணைத்தலைவர் நியமிக்க பட வேண்டும்!!

மாநில தலைவர் பாலாஜிவெங்கடேசலு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வேலுசாமி வரவேற்றார். மாநில துணை தலைவர் சுகுமாரன் முன்னிலை வகித்தார். இதில் சிறுசேமிப்பு துறை துணை இயக்குனர் பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

Update: 2024-08-18 13:42 GMT
தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு முகவர்கள் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நாமக்கல், அடுத்த கீரம்பூர் டோல்கேட் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் பாலாஜிவெங்கடேசலு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வேலுசாமி வரவேற்றார். மாநில துணை தலைவர் சுகுமாரன் முன்னிலை வகித்தார். இதில் சிறுசேமிப்பு துறை துணை இயக்குனர் பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் சிறுசேமிப்பு முகவர்களுக்கு மீண்டும் ஒரு சதவீதம் தரகு தொகை வழங்க வேண்டும்.அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்கள் ஏஜெண்ட் புதுப்பித்தலின் போது, காவல்துறை சான்று பெறும் வழிமுறைகள் எளிமையாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மகளிர் மற்றும் நிலை சிறுசேமிப்பு முகவர்களின் வாழ்வாதாரம் காக்கவும், தேசிய சேமிப்பு பயிற்சியகத்தின் சிறுசேமிப்பு ஏஜெண்ட்கள் மூலம் பல மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும், சிறுசேமிப்பு முகவர்களுக்கு, பிழைப்பூதியம் அல்லது மதிப்பூதியம் சிறுசேமிப்புத்துறை அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மூலம் வழங்கி, சிறுசேமிப்பு முகவர்களை காக்க வேண்டும். சிறுசேமிப்புத்துறைக்கு தனியே துறைத்தலைவர் நியமிக்க வேண்டும். பொதுமக்கள் சார்ந்து அரசு அளிக்கும் அனைத்து நலத்திட்டங்களின் பயன்பாடுகளை பெற சிறுசேமிப்பு முகவர்களுக்கும், பயனாளிகள் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறுசேமிப்புத்திட்ட முதலீட்டு வணிகத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சிறுசேமிப்பு முகவர் வேலுமணிக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் ஆத்தூரை சேர்ந்த சிறுசேமிப்பு முகவர் சிவகுமார் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பசுமை நாயகர் விருது பெற்றார் அவருக்கு சிறப்பு சமூக சேவை சாதனையாளர் பரிசு வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு-ஓய்வு) சரவணன் மற்றும் சிறுசேமிப்பு முகவர்கள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News