பாண்டமங்கலம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது.
பாண்டமங்கலம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்தவர் போலீசார் கைது செய்தனர்.;
Update: 2025-01-17 16:17 GMT
பரமத்திவேலூர், ஜன.18: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, அண்ணா நகர் அருகே சட்டவிரோத மது பாட்டில்களை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தவரை வேலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா நகர் அருகே உள்ள சின்னாம்பள்ளிமேடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சோதனை மேற்கொண்டார். இதில் சின்னாம்பள்ளிமேடு பகுதியில் மறைத்து வைத்து மது விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராமசாமி (73) என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்து மறைத்து வைத்திருந்த 27 மது பாட்டில்களை வேலூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.