ராசிபுரம் அருகே இரண்டு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி : 5 பேர் படுகாயம்..

ராசிபுரம் அருகே இரண்டு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி : 5 பேர் படுகாயம்..

Update: 2024-09-29 12:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரவு இரண்டு ஆட்டோக்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர் ஐந்து பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியை சேர்ந்த வியாபாரிகள் பேளுக்குறிச்சி சந்தைக்கு காய்கறிகளுடன் வந்தனர். சந்தை முடிந்த பிறகு காய்கறிகளை மகேந்திரா பிக்கப் வேனில் ஏற்றிக்கொண்டு 5 பேர் இரவு, 10 மணியளவில் பேளுக்குறிச்சியில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். வண்டியை சேசன் சாவடியை சேர்ந்த தங்கம்,30 என்பவர் ஓட்டி வந்தார். அப்போது எதிரே நெடுஞ்சாலை சிக்னல் லைட்டுகளை சரிபார்ப்பவர்கள், 2 பேர் மற்றொரு பிக்கப் வேனில் சென்றுக்கொண்டி ருந்தனர். போடிநாயக்கன்பட்டி அருகே வரும்போது இரண்டு ஆட்டோக்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் டிரைவர் தங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த முருகன்,45, சதீஷ்குமார், 35, கிருஷ்ணமூர்த்தி, 33, பெரியசாமி, 40 உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் பெரியசாமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராசிபுரம் அரசு மருத்துவமனையில், 2 பேர், சேலம் தனியார் மருத்துவமனைக்கு, 3 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் படுகாயம் அடைந்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை நான்கு, ஐந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் இந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த விபத்து குறித்து பேளுக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News