நாகையில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணக்கட்டை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பெண் போஸ்ட்மென்; குவியும் பாராட்டுக்கள்!!
நாகையில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணக்கட்டை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பெண் போஸ்ட்மேனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.;
By : King 24x7 Desk
Update: 2025-12-23 07:45 GMT
நாகப்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வைரமுத்துவின் மனைவி பவித்ரா. இவர் நாகப்பட்டினத்தில் போஸ்ட்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் பணிக்குச் சென்ற போது ஐயப்பன் கோவில் பகுதி அருகே உள்ள பென்டகன் மருத்துவமனை எதிரே சாலையில் 50,000 கட்டு விழுந்து கிடந்ததைக் பவித்ரா கண்டுள்ளார். இதுக்குறித்து நாகப்பட்டினம் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததுடன் அந்த பணத்தை காவலர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்த செயலை செய்த பெண் போஸ்ட்மெனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் ஏற்கனவே சட்டையப்பர் மேலவீதி பகுதியில் 1 சவரன் தோடை காவல்துறையினர் மூலம் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.