கடலூர்: அரசு பஸ் மோதி கோர விபத்து - 7 பேர் பலி
கடலூர்: அரசு பஸ் மோதி கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.;
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எழுத்தூர் பேருந்து நிலையம் அருகே திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற அரசு பேருந்து, டயர் வெடித்து சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக வந்த இரண்டு கார்கள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.