ஒன்று முதல் 7ம் வகுப்பு வரை 680 பள்ளிகளுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்

Update: 2024-10-02 18:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக முழுவதும் காலாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுப்பு முடிந்து மீண்டும் பள்ளிக்கூடம் திரும்பும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள 680 பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு திரும்பியவுடன் அவர்களின் கைகளில் பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் விருத்தாச்சலம் தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து இரண்டாம் பருவ பாட புத்தகம் மற்றும் பாட குறிப்புகள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர் சேகர் அந்தந்த பள்ளிகளில் இருந்து வந்த அலுவலர்களிடம் பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது வட்டார கல்வி அலுவலர் விருத்தாசலம் ராஜேஸ்வரி, பண்ருட்டி செல்வம், கம்மாபுரம் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News