அரசிராமணியில் சூதாடிய ஆயுதப்படை காவலர் உள்பட 8 பேர் கும்பலாக கைது!

சங்ககிரி:அரசிராமணியில் சூதாடிய ஆயுதப்படை காவலர் உள்பட 8 பேர் கும்பலாக கைது தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை!

Update: 2024-10-10 17:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி, குள்ளம்பட்டி பகுதியில் ரொக்கம் வைத்து சூதாடிய ஆயுதப்படை காவல் உள்பட எட்டு பேரை தேவூர் போலீஸôர் புதன்கிழமை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். அரசிராமணி, குள்ளம்பட்டி பகுதியில் ரொக்கம் வைத்து சீட்டு கட்டுகள் விளையாடி வருவதாக தேவூர் போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து தேவூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் எஸ்.சண்முககுமார் தலைமையில் போலீஸôர் சோதனை நடத்தினர் அதில் அப்பகுதியில் ரொக்கம் ரூ.11290 வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்த எடப்பாடி வட்டம், வெள்ளரி வெள்ளி, குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (44), கொடைகவுண்டனூர் தங்கராஜ் (55), மலங்காடு தமிழ்செல்வன் (45), அரசிராமணி பிட் }1 சின்னசாமி (49), ராமர் (45), குள்ளம்பட்டி ராஜசேகர் (41), குஞ்சாம்பாளையம் ஆறுமுகம் (45), ஈரோடு ஆயதப்படை காவலர் வெள்ளரிவெள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயபால் (29) உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

Similar News