திம்மாம் பேட்டை காவல் நிலையத்தில் SP திடீர் ஆய்வு

வாணியம்பாடி எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் திடிர் ஆய்வு;

Update: 2024-12-28 06:23 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஷ்ரேயா குப்தா திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை காவல் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்த்த திடீர் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டும், கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

Similar News