செஞ்சியில் சிவன் கோவிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேகம்

செஞ்சியில் சிவன் கோவிலில் நடைபெற்ற சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-26 07:26 GMT

சங்காபிஷேகம் 

விழுப்புரம் மாவட்டம் ,செஞ்சி, சிறுகடம்பூர் விசாலாட்சியம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டியும், கோவிலில் திருப்பணிகள் விரைவில் நடக்கவும் 108 சங்காபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதனையொட்டி, காலை 7:00 மணிக்கு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு கலசம் பிரதிஷ்டை செய்து, 108 சங்குகளுக்கு சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது.வேள்வி முடிவில் காசி விஸ்வநாதருக்கும், விசாலாட்சியம்மனுக்கு சங்காபிஷேகமும், கலச நீர் கொண்டு மகா அபிஷேக, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News