மயிலாடுதுறைக்கு 176 துணை ராணுவபடை வீரர்கள் வருகை

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை விட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 176 துணை ராணுவ படை வீரர்கள் வருகை தந்தனர்.

Update: 2024-04-02 16:54 GMT

மயிலாடுதுறைக்கு வருகை தந்த துணை ராணுவம்

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒடிசாவில் இருந்து இந்திய துணை ராணுவப்படை வருகை. அசிஸ்டன்ட் கமாண்டன்ட் எம்.எம் சபார், காளி சரண் மாஜி ஆகியோர் தலைமையில் வருகை தந்த 176 துணை ராணுவ படையினருக்கு மயிலாடுதுறை மன்னனம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் எஸ்பி மீனா வரவேற்பு தெரிவித்து தேர்தலில் துணை ராணுவப்படையினர் ஈடுபட உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
Tags:    

Similar News