ரூ.30 லட்சம் மதிப்பு வீடு கோயிலுக்கு தானம் கணவர் ஆசையை நிறைவேற்றினார் மனைவி!

நிகழ்வுகள்

Update: 2024-10-08 03:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை: இலுப்பூர் தாலுகா வயலோகம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் அருகே வசித்து வந்தவர் மணிமுத்து. வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வேளாங்கண்ணி. இவர்களுக்கு சொந்தமாக வீடு உள்ளது. தனது இறப்புக்கு பின்னர் வீட்டை முத்து மாரியம்மன் கோயில் பெயரில் எழுதி வைக்குமாறு மனைவியிடம் மணிமுத்து கூறினார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக மணிமுத்து உயிரிழந்த நிலையில், அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீட்டை முத்து மாரியம்மன் கோயில் பெயருக்கு வேளாங்கண்ணி எழுதி வைத்தார். இதற்கான பத்திரப்பதிவை இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துராமன் மற்றும் அலுவலர்களிடம் வழங்கினார்.

Similar News