திருநெல்வேலி மாநகராட்சியில் 31 பேர் பணியிட மாற்றம்

திருநெல்வேலி மாநகராட்சியில் 31 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-30 16:22 GMT

நெல்லை மாநகராட்சி ஆணையர்

நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் பணியாற்றி வந்த சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 31 பேரை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்துள்ளதாக நெல்லை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பணியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News