சூதாட்டம் விளையாடிய 4 பேர் கைது

விராலிமலை - கல்குடி பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-22 08:31 GMT

 சூதாட்டம் விளையாடிய 4 பேர் கைது

விராலிமலை - கல்குடி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வந்த தகவலின்பேரில் சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடிய அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி (26), மலையாண்டி (27),குமார்(40), திருமுருகன் (28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News