ஆயுதங்களுடன் சென்ற 5 பேர் கைது
முள்ளிப்பாடி சந்தவர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தவர்கள் கைது.
Update: 2024-02-06 06:47 GMT
பெரியபள்ளப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் (22). குழந்தைபட்டியை சேர்ந்த யோகேஷ் (24), மலவார்பட்டியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (30), அம்மையப்பன்(36), குழிப்பட்டியை சேர்ந்த விஜய் (22), ஆகிய ஐவரும் முள்ளிப்பாடி சந்தவர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர். இதை அறிந்த தாலுகா போலீசார் ஐவரையும் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.