வாக்கு எண்ணிக்கையொட்டி பாதுகாப்பு பணியில் 900 காவல்துறையினர்

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு வரும் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை. பாதுகாப்பணியில் 900 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்!

Update: 2024-06-01 08:58 GMT

பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

இந்தியா முழுவதும் 18 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு நடைபெற்று நிறைவடைகிறது. இதன்பிறகு வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையமாக பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி அரசு கல்லூரியில் நடைபெற உள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்பு கடந்த ஒரு மாத காலமாக வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் , விவி பேட் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் எல் ஆர் ஜி அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு என்னும் பணியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 900 போலீசாரை பணியமர்த்த மாநகர காவல் துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட காவல்துறையுடன் கலந்தோசித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு வகுப்பறையிலும் வாக்கு என்னும் பணி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் பகுதி , கல்லூரி வளாகத்திற்குள் , கல்லூரி வளாகத்திற்கு வெளியே மற்றும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பதட்டமான இடங்களில் பாதுகாப்பு பணி என 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் , மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News