ஐஜேகே கட்சியின் இளைஞர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

கரூர் மாவட்டம், ராயனூரில் நடைபெற்ற ஐஜேகே கட்சியின் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-01-08 08:05 GMT

ஐஜேகே கட்சியின் இளைஞர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் ஸ்ரீ வள்ளியம்மன் சமுதாய கூடத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விவசாயி மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் செயலாளர் ரங்கசாமி, மகளிர் அணி தலைவி சித்ரா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கட்சியில் புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு கரூர் கிழக்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா கட்சி துண்டை அணிவித்து கட்சி பணி சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் கட்சியினரிடையே பேசிய பிரகாஷ்கன்னா, வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் கட்சியினர் முனைப்போடு செயல்பட்டு வெற்றியை தேடி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பூத் கமிட்டி நிர்வாகிகளை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அப்போதுதான் கட்சியின் வெற்றி வாய்ப்பு உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News