சேலம் அருகே காதல் மனைவி சென்றதால் தொழிலாளி தற்கொலை

சேலம் அருகே காதல் மனைவி கோபித்து கொண்டு சென்றதால் தொழிலாளி தற்கொலை

Update: 2024-01-08 14:01 GMT

கோப்பு படம் 

சேலம் கன்னங்குறிச்சி தாமரைநகரைச் சேர்ந்தவர் அருண் (வயது 22). தொழிலாளி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக சென்ற இவர்களது குடும்பத்தில் திடீரென பிரச்சினை ஏற்பட்டது.

கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ரேணுகா கோபித்துக் கொண்டு தன்னுடைய அக்காள் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அவரை சமாதானம் செய்து குடும்பம் நடத்த அருண் அழைத்துள்ளார். அதற்கு ரேணுகா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த அருண், தன்னுடைய மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அருண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அருண் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கன்னங்குறிச்சி போலீசார் தற்கொலைக்கு வேறு காரணம் எதுவும் இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News