தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சனப்பிரட்டி அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-01-08 16:12 GMT

காவல் நிலையம் 

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், சணப்பிரட்டி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன்.

இவர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி அன்று மாலை 6:30 மணி அளவில் அருகில் உள்ள செல்வநகர் தென்னந்தோட்டத்தில் தேங்காய்களை பறிக்க, தென்னை மரத்தில் ஏறி உள்ளார். பணியின் போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனால், அவருக்கு வலது கை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்தவர்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக செல்லப்பன் மகன் கலைவாணன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த செல்லப்பனின் உடலை திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News