ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்!
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் பக்தர்களுக்காக கட்டப்பட இருக்கும் சுகாதார வளாகம் குறித்தான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-07-04 09:54 GMT
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 4) அண்ணாமலையார் கோயிலை சுற்றி 14 கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்காக கட்டப்பட இருக்கும் சுகாதார வளாகம் குறித்தான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.இதில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.