மேற்கூரை இடிந்து விழுந்து மாணவன் பலி

நாகை அருகே வீட்டை சுந்தப்படுத்தும் போது மேற்கூரை இடிந்து விழுந்ததால், மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்தனர்.

Update: 2024-01-08 15:49 GMT

நாகை ஒன்றியம் சங்கமங்கலம் ஊராட்சி, பழையனூர் மேல்பாதி, மேலத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான காலனி வீடு உள்ளது. மேற்படி வீட்டை பொங்கல் பண்டிகைக்காக சுத்தம் செய்வதற்கு தனது உறவுக்கார சிறுவர்களான பழையனூர் மேல்பாதி சண்முகம் மகன் அஜிஸ் (வயது 15). (ஆழியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.). இவருடன் புலியூர் மேலத்தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் வெற்றிவேல் (13 ), (எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்), பழையனூர் மேல்பாதி அறிவழகன் மகன் நரேஷ் (13) ( எட்டாம் வகுப்பு மாணவன்), பழையனூர் மேல்பாதி மணிகண்டன் மகன் லிவின் ராஜ் (12) (7 ஆம் வகுப்பு மாணவன் ) ,ஆகியோர்களை அழைத்து நேற்று மதியம் சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார்.

மேற்படி காலனி வீட்டின் மேற்கூரை திடிரென இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்களுக்கும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அஜிஸ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த வெற்றிவேல், நரேஷ், லிவின் ராஜ் ஆகிய முன்று பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News