கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய வாலிபர் காயம்

கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது தவறி கீழே விழுந்ததில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-01-26 16:49 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் மேல ரத வீதி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் முத்தழகு (18),  இவர் இன்று பிற்பகல் 15.24 மணிக்கு திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயிலில் தனது அப்பா, அம்மா, இரண்டு அக்கா மற்றும் அப்பத்தா என 6 பேர் திருச்செந்தூரிலிருந்து, சாத்தூருக்கு பயணம் செய்து வந்துள்ளனர். 

இந்த ரயில் சாத்தூர் ரயில் நிலையம் வந்ததும் அப்பா அம்மா அக்கா என 5 பேர் ரயில் வண்டியை விட்டு இறங்கி விட்டனர். முத்தழகு கழிவறைக்கு சென்று திரும்ப வருவதற்குள் ரயில் வண்டி புறப்பட்டதால், அவர் ரயில் வண்டியிலிருந்து குதித்து நடைமேடையில் விழுந்ததில் பற்கள் உடைந்தும், முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி ரயில் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News