திருப்பூர் மேயர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் திருப்பூர் பொங்கல் 2024 விழாவை முன்னிட்டு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-09 07:25 GMT

மேயர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் முன்னிலையில் திருப்பூர் பொங்கல் திருவிழா - 2024 முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், துணை ஆணையாளர்கள் சுந்தர்ராஜ்,சுல்தானா, உதவியாளர்கள் முருகேசன்,

மாநகர காவல் துறை, நொய்யல் பண்பாட்டு அமைப்பு ,நிட்மா, ஜீவநதி நொய்யல் சங்கம் சார்ந்த பிரதிநிதிகள் முருகானந்தம், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News