அனைத்து அரசு பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கம்
திருச்செங்கோடு பகுதிகளில் அனைத்து அரசு பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கம்;
By : King 24x7 Website
Update: 2024-01-09 06:43 GMT
திருச்செங்கோடு பகுதிகளில் அனைத்து அரசு பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருச்செங்கோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமலையில் 32 வெளியூர் பேருந்துகளும் 32 நகர பேருந்துகளும் என மொத்தம் 64 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. வேலை நிறுத்ததில் யாரும் ஈடுபடாமல் 64 பேருந்துகளும் முழுமையாக இயங்கியது. அனைத்தும் வழக்கமான ஓட்டுனர்களை வைத்து இயக்கப்பட்டது. இதுவரை எந்த போராட்டமும் நடைபெறவில்லை போராட்டத்தை ஒட்டி பேருந்து நிலையம் மற்றும் டெப்போ அருகில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது