ஆபாசமாக பேசி பெண் மீது தாக்குதல் - கணவர் உள்பட 6 பேர் மீது புகார்

Update: 2023-11-10 05:47 GMT

வாணியம்பாடி காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் நகினா தபசூம் (21) இவருக்கும் சையது முனவர் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், தற்போது கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் நகினா தபசூம் ஜீவானம்சம் கோரி வாணியம்பாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இன்று நகினா தபசூம் நீதிமன்றத்திற்கு வந்த போது அங்கு தனது நண்பர்களுடன் வந்த சையத் முனவர் நகினா தபசூமை ஆபாசமாக பேசி நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.இதனை தொடர்ந்து நகினா தபசூம் இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் கணவன் சையத் முனவர் உட்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நகினா தபசூமை ஆபாசமாக பேசி தாக்கிய பரூக் என்பவரை கைது செய்து தலைமறைவாக உள்ள சையத் முனவர் உட்பட 5 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News