டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம்

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-16 12:58 GMT
ரத்ததான முகாம்
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம், லயன்ஸ் கிளப், சாகுபுரம் ஆன்மா, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையுடன் இனைந்து நடத்திய இரத்ததான முகாம் கிளப் ஹவுஸில் நடைபெற்றது. முகாமை மூத்த செயல் உதவித்தலைவர் (பணியகம்) கோ.ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தார். முகாமில் 70 ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர்.
Tags:    

Similar News