சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-06-21 15:34 GMT

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மருதுபாண்டியர் கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரியின் முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் இரா.தங்கராஜ், ஆராய்ச்சி புலத்தலைவர் முனைவர் கோ.அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சிறப்பு விருந்தினராக,  மனவளக்கலைப் பேராசிரியர் ப.இராஜேந்திரன் கலந்து கொண்டார்.  இவ்விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக மேலாளர் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

முன்னதாக, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ந.சந்தோஷ்குமார்  வரவேற்றார். நிறைவாக நாட்டு நலப்பணி திட்ட (அலகு- 2) அலுவலர் பேரா டி.பூங்குயில்  நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், மேலாளர் இரா.கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News