போக்சோ வழக்கு விசாரணைக்கு பயந்து கட்டிட தொழிலாளி தற்கொலை

போக்சோ வழக்கு விசாரணைக்கு பயந்து கட்டிட தொழிலாளி தற்கொலை. சேலத்தில் பரிதாபம்.

Update: 2024-07-11 04:46 GMT

தற்கொலை

சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் வானக்காரன்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). கட்டிட தொழிலாளி. இவர் மீது 3 வயது சிறுமியை சில்மிஷம் செய்ததாக போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பழனிசாமி முன்ஜாமீனில் இருந்தார். இதற்கிடையே வழக்கு வருகிற 27-ந் தேதி விசாரணைக்கு வர இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பழனிசாமி வழக்கு விசாரணைக்கு பயந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News