கூட்டுச்சாலை விரிவாக்கம் - நிலம் அளவீடு பணி துவக்கம்

இரு சாலைகள் சந்திக்கும் இடத்தில், சாலை விரிவுப்படுத்த அளவீடு செய்யும் பணியை நெடுஞ்சாலை துறையினர் துவக்கி உள்ளனர்

Update: 2024-05-26 03:42 GMT

நிலம் அளவீடு 

காஞ்சிபுரம் அடுத்த பரந்துார் - பொன்னேரிக்கரை வரையில், 8.2 கி.மீ., துார சாலை உள்ளது. இச்சாலை, 5 கோடி ரூபாய் செலவில், கடந்தாண்டு, 5.5 மீ., அகலத்தில் இருந்து, 1.5 மீ., கூடுதலாக விரிவுபடுத்தி, 14 இடங்களில் தரைப்பாலம் மற்றும் 7 மீ., அகலத்திற்கு சாலை விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, பள்ளூர்- - சோகண்டி சாலை மற்றும் பரந்துார்- - காரப்பேட்டை சாலை என, இரு சாலைகள் சந்திக்கும் இடத்தில், சாலை விரிவுப்படுத்த அளவீடு செய்யும் பணி நேற்று நெடுஞ்சாலை துறையினர் துவக்கி உள்ளனர். இந்த பணிகள் நிறைவு பெற்ற பின், திட்ட மதிப்பீடு தயாரித்து பிரதான கூட்டுச்சாலை விரிவுப்படுத்தப்படும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News