மதுரையில் ட்ரோன் பறக்க தடை

மதுரையில் அக்.29,30 தேதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

Update: 2023-10-28 10:42 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்ந்த தலைவர்கள்,பல்வேறு அமைப்புகள் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் மதுரை மாவட்டத்திற்கு அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளார்கள்.

எனவே 2 தினங்கள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்,மதுரை முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் ட்ரோன் கேமரா இயக்குவதற்கு தடை செய்யப்படுகிறது. தடை உத்தரவை கண்காணிக்க காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தடையை மீறி ட்ரோன் கேமராக்கள் இயக்குபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா சுற்றறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News