எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-07-03 14:04 GMT

  எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். மாற்றம் தேடி நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் முயற்சியில் ஞானம் ட்ரெடிங் கம்பெனி சார்பாக ஞான சிகாமணி அவர்கள் பள்ளிக்கு தேவையான பீரோ மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். மேலும் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

விழாவில் ஆசிரியர் பயிற்றுனர் சிவ பார்வதி, சமூக ஆர்வலர்கள் பாலமுருகன், அசோக் குமார், கார்த்திக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அனைத்து குழந்தைகளுக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. ஆசிரியை அம்பிகா நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சுகுமாறன், மனோன்மணி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News