மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

இலக்கியம்பட்டியில் வீட்டில் மயங்கி விழுந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-07-03 13:24 GMT

 இலக்கியம்பட்டியில் வீட்டில் மயங்கி விழுந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலக்கியம்பட்டி இபி காலனியை சேர்ந்தவர் கிரி , தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தது . இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News