முதியவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே முதியவர் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானவர் தூக்கிட்டு தற்கொலை.

Update: 2024-02-13 09:36 GMT

முதியவர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி ஐஸ்வர்யம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூசை வயது 85. இவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் மன உளைச்சலில் இருந்த சூசை வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே திண்டுக்கல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News