அரசு பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

அழகியமண்டபத்தில் சாலையை கடக்க முயன்ற போது அரசு பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு.

Update: 2024-07-03 08:53 GMT

உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த பரைக்கோடு வைகுண்ட புரம் பகுதியை சேர்ந்த வர் செல்வராஜ் மனைவி தங்கம் (65). இவர் சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை சேகரித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் இன்று அதி காலை அழகியமண்டபம் சந்திப்பு பகுதியில் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்தார். அப் போது என்எச் 47 தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுபஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதி யது. இதில் படுகாயம் அடைந்த தங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி தக்கலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News