கள்ளை இறக்கி விற்பனை செய்ய அனுமதி வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கள்ளை இறக்கி விற்பனை செய்ய அனுமதி வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-06-29 01:28 GMT

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கள்ளை இறக்கி விற்பனை செய்ய அனுமதி வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கள் இறக்க அனுமதி அளிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள்,கள் உணவின் ஒரு பங்கு என்றும் கள் போதை பொருள் இல்லை என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக,ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கற் விற்பனை செய்வது போன்று தமிழகத்திலும் கள் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News