பர்னிச்சர் ப்ளைவுட் கடையில் தீ விபத்து

ஈரோட்டில் பர்னிச்சர் மற்றும் ப்ளைவுட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

Update: 2024-06-28 16:47 GMT

தீ விபத்து

ஈரோடு வீரப்பன்பாளையம் பிரிவு அருகே உதயகுமார் என்பவருக்கு சொந்தமான 2 பர்னிச்சர் கடைகள் உள்ளன.இன்று மாலை பர்னிச்சர் கடைகளில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த பிளைவுட் கடைகளிலும் பரவியது. இதனையடுத்து பணியிருந்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியததால் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து 3 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோபா , கட்டில் , பீரோ உள்ளிட்ட பர்னிச்சர் மற்றும் பிளைவுட் பொருட்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது.இந்த தீ விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News