ஓட்டுநரை கத்தியால் குத்திய மனைவி கள்ளக்காதலன் கைது !

தக்கலை அருகே ஓட்டுநரை கத்தியால் குத்திய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-04 11:06 GMT

 கைது

தக்கலை அருகே மாறாங்கோணம் சானல் கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 34), டிரைவர். இவர் 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து மெர்லின் சீத்தா (30) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2 வருடங்களுக்கு முன்பு குமாரபுரம் எரிச்சமா மூட்டுவிளை பகுதியை சேர்ந்த ரீகன் ஜோய் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு மெர்லின் சீத்தா 2 பெண் குழந்தைகளுடன் ரீகன்ஜோய் உடன் சென்றுவிட்டார்.

இதனால்ராஜேந்திரன் தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி ராஜேந்திரன் வேலை விஷயமாக மணக்காவிளை செல்லும்போது மணலிக்கரை சந்தை அருகில் வைத்து மெர்லின்சீத்தா மற்றும் ரீகன் ஜோய் ஆகியோரை ஒன்றாய் பார்த்துள்ளார். இதையடுத்து மெர்லின் சீத்தாவிடம் ஒரு வருடமாக என்னை தவிக்கவிட்டு எங்கே சென்றாய் என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவியும்.. கள்ளக்காதலனும் சேர்ந்து அவதூறாக பேசி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரனை குத்தினர். இதனால் கீழே விழுந்த ராஜேந்திரன் வலியால் துடிக்க அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றனர்.

உடனடியாக ராஜேந்திரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்குராஜேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரது உறவினரான மணலிக்கரை பகுதியை சேர்ந்த விஜி கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மெர்லின் சீத்தாவை கைது செய்து தலைமறைவாக உள்ள ரீகன்ஜோயை தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவுக்கு தப்பி ஓட முயன்ற ரீகன் ஜோயை குழித்துறை ரெயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

Tags:    

Similar News