ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்களுக்கு சிகை அலங்காரம்

தூத்துக்குடியில் ஆல் இந்தியா பியூட்டி கேர் அசோசியேசன் சார்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 50 முதியவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யப்பட்டது. 

Update: 2024-03-17 04:53 GMT

சிகை அலங்காரம் 

தூத்துக்குடி முத்தம்மாள் காலனில் உள்ள ராஜ முத்துக்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள சுமார் 50 முதியவர்களுக்கு ஆல் இந்தியா பியூட்டி கேர் அசோசியேசன் சார்பாக மாவட்ட தலைவி தங்க ஈஸ்வரி தலைமையில், கணேசன் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கணேஷன் கலா நிதியுதவியுடன் சிகை அலங்காரம் செய்து மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் முத்து சேகர், துணைத் தலைவி சந்தான லட்சுமி, பொருளார் ஸ்ரீதேவி, துணைச் செயலாளர் கலாமணி, பொதுக்குழு உறுப்பினர் மெஸியா, முத்து பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News