ஈரோட்டில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் துவக்கம்

ஈரோட்டில் சட்ட உரிமை பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமை தொழிற்சங்கத்தின் புதிய கிளை துவங்கப்பட்டது.

Update: 2024-07-01 06:12 GMT

சட்ட உரிமை பாதுகாப்பு சங்க கிளை துவக்கம்

சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் சட்ட உரிமை தொழிற்சங்கத்தின் ஈரோடு கிளை சோலார் அருகே உள்ள கார்னீஷ் கிளப்பில் துவக்கப்பட்டது. அகில இந்திய நிறுவனர் தலைவர் அருண் சித்தார்த்தா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து 80 பெண்களுக்கு இலவச சேலை, உணவு வழங்கினார். அவர் தனது உரையில் இச்சங்கத்தின் மூலம் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வழக்கறிஞரை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்ட விழிப்புணர்வு முகாமை கூடுதல் ஆட்சியர் ராமகிருஷ்ண சாமி துவக்கி வைத்தார். சங்கத்தின் மாநில செயலாளர் ரேவதி கலந்து கொண்டார். மேலும் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சாந்தா தேவிக்கு மாநில செயலாளர் பதவி உயர்வு வழங்கி கௌரவித்தனர்.
Tags:    

Similar News