வாழ்முனீஸ்வரர் கோவில் குடமுழுக்கு !

நாகை மாவட்டம் திருமருகல் அருகே வாழ்முனீஸ்வரர் கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2024-07-10 10:22 GMT

கோவில் குடமுழுக்கு

நாகை மாவட்டம் திருமருகல் அருகே வாழ்முனீஸ்வரர் கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் தரிசனம் திருமருகல் ஒன்றியம் சரண்யாபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் உடனுறை வாழ்முனீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவில் குட முழுக்கு நடந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தற்போது திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அக்கிராம மக்கள், மருளாளிகள் ஆகியோர் முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது திருப்பணிகள் முடிவடந்ததையடுத்து நேற்று மகா குடமுழுக்கு நடந்தது.

முன்னதாக குடமுழுக்கையொட்டி கடந்த 8-ந்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 9-ந்தேதி காலை யாக சாலை பூஜை, மகாபூர்ணாஹூதி, சுமங்கலி பூஜை,தம்பதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

நேற்று அதிகாலை கோ பூஜை, யாக பூஜை, ரக்சாபந்தனம், தீபாராதனை உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கடங்கள் புறப்பட்டு 10 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவர் குடமுழுக்கும் நடந்தது.

தொடர்ந்து சாமிக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை சரண்யாபுரம் திருப்பணி குழுவினர், மருளாளிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News