கலைஞர் நூற்றாண்டு விழா கபடி போட்டி

பாளையம்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கவுள்ள கபடி போட்டிக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-01-08 12:28 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 13, 14 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு முகூர்த்த கால் நட்டு பணிகளை துவக்கி வைத்தனர். வரும் 13ஆம் தேதி மாலை அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் இணைந்து இந்தப் போட்டியை துவக்கி வைக்க உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் அணிக்கு ரூ 50,000 பரிசுப் பணமும், இரண்டாவது பரிசாக ரூ 40,000 ம், மூன்றாவது பரிசாக ரூ 30,000 ம் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News