சாலை ஓர வியாபாரிக்கு ஜி பே மூலம் பணம் செலுத்திய எல்.முருகன்

எல்.முருகன் சிறுமுகையில் சாலை ஓர மாம்பழ வியாபாரிக்கு ஜி பே மூலம் பணம் செலுத்தினார்.

Update: 2024-04-02 00:42 GMT

எல்.முருகன் சிறுமுகையில் சாலை ஓர மாம்பழ வியாபாரிக்கு ஜி பே மூலம் பணம் செலுத்தினார்.


நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் கட்சியினர் இடையே உரையாற்றி விட்டு சிறுமுகை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள தனது காரில் மேட்டுப்பாளையம் சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது சிறுமுகை கள்ளிப்பாளையம் அருகே வந்தபோது சாலை ஓரத்தில் மாம்பழம் மற்றும் நெல்லிக்காய் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களிடம் மாம்பழங்ளை வாங்கியவர் அதற்கான தொகையை ஜி பேர் மூலம் அளித்தார்.இதனை அடுத்து வியாபாரிகளிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மோடி ஆட்சியில் டிஜிட்டல் இந்தியாவாக மாறியதால் சாலை ஓர வியாபாரிகளிடம் கூட டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்றார்.மேலும் இந்தியா வல்லரசு நாடாக மாற தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News