மயிலாப்பூர் கழிவு நீர் கால்வாயில் ஆண் சடலம் கண்டெடுப்பு
சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Update: 2024-06-20 04:57 GMT
ஆண் சடலம்
சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே இருக்கக்கூடிய பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது, இதில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.