மெக்கானிக் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு.

புலியூர்குறிச்சி அருகே அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி மெக்கானிக் உயிரிழந்தார்.

Update: 2024-05-18 00:58 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காடு பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி 30-வயதான இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கார் கம்பெனியில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.இவர் கொல்லங்கோடு பகுதியில் உள்ள வாடிக்கையாளர் ஒருவரின் வாகனத்தை வீட்டிற்கு சென்று பழுது பார்த்துவிட்டு மாலை தனது பைக்கில் கம்பெனிக்கு திரும்பியுள்ளார் திருவனந்தபுரம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவில் நோக்கி சத்தியமூர்த்தி சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளார்.

எதிரே மினி பேருந்து ஒன்று வந்த நிலையில் சத்தியமூர்த்தி நிலைதடுமாறி பைக்குடன் சாலையில் விழுந்ததில் மினி பேருந்தின் வலது புற பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது இதில் சத்தியமூர்த்தி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News