பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

தூர்வாரப்பட்ட பிச்சைக்காரன்பள்ளம் ஓடையை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

Update: 2023-12-22 06:08 GMT
ஈரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை நிரம்பி அதன் அருகியிலுள்ள அன்னை சத்யா நகர் , மல்லி நகர் பகுதிகளை மழை நீர் சூழந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். பிச்சைக்காரன் ஓடை கடந்த 10 ஆண்டுகளாக தூர் வாரத்தால் மழை நீர் குடியிருப்புகளை சூழந்த்தாக பொதுமக்கள் குற்றம்சாட்டியதையடுத்து , கடந்த இரு வாரங்களாக பிச்சைக்காரன் பள்ளம் ஓடை தூர்வாரப்பட்டது. இதனை பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
Tags:    

Similar News